நான்கு வீரர்களுக்கு ஓய்வளித்தது இலங்கை கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் பேரவை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இடம்பெறவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடருக்கு முன்னதான ஒரு நாள் சர்வதேச அணியில் இருந்து பதும் நிசாங்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகிய நான்கு முக்கிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் சுற்றுப்பயணத்தின் சவால்களுக்கு தயாராகவும் ஓய்வெடுக்கவும் வீரர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலாக நுவனிந்து பெர்னாண்டோ, லஹிரு உதாரா, மற்றும் எஷான் மலிங்க ஆகியோரை அணியில் இணைத்துள்ள தெரிவாளர்கள், புதிய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பிரகாசிக்க வாய்ப்பளித்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளதோடு, இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.

அணி தனது பலத்தை சோதிக்க இறுதி ஆட்டத்தை பயன்படுத்தும் என அணியின் தலைவர் சரித் அசலங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

Latest articles

Similar articles