சிறுவனுக்கு கிறிஸ்மஸ் திகில்: விமான ஊழியர்களால் தவறான விமானத்தில் ஏற்றப்பட்டார்

ஆறு வயது சிறுவன் தனது பாட்டியை சந்திப்பதற்காக ஸ்பிரிட் எயார்லைன் (Spirit Airline) குழுவினரால் தவறான விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முதன்முறையாக விமானத்தில் பயணித்த சிறுவன், புளோரிடாவில் தனது பாட்டியை சந்திக்கவிருந்தான்.

WINK-TVயிடம் கருத்து வெளியிட்ட பாட்டி, “நான் விமானத்தின் உள்ளே விமானப் பணிப்பெண்ணிடம் ஓடினேன், நான் அவளிடம், ‘என் பேரன் எங்கே? என்றேன், அவர் பிலடெல்பியாவில் (Philadelphia) உங்களிடம் ஒப்படைக்கப்பட்டார்?’ என்றால் அவள், ‘இல்லை, என்றேன் நான்.

விமான நிறுவனத்திடம் இருந்து தகவல் இல்லாமையால் குறித்தி மூதாட்டி கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

“அது எப்படி நடந்தது? அவரை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டார்களா? பேரனின் தாய் ஆவணங்களை ஒப்படைத்த பின்னர், விமானப் பணிப்பெண் அவனை தானே போக அனுமதித்தாரா? அவர் தானே தவறான விமானத்தில் குதித்தாரா?”

இலக்கிலிருந்து 160 மைல் தொலைவில் உள்ள ஆர்லாண்டோவிற்கு தான் வந்தடைந்ததைத் தெரிவிக்க, இறங்கிய பின்னர் பேரன் பாட்டிக்கு தொலைபேசி அழைப்பெடுத்துள்ளான்.

தவறுக்கு விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

நிறுவனம்“சிறுவன் எப்போதும் ஒரு ஸ்பிரிட் எயார்லைன் குழு உறுப்பினரின் கவனிப்பு மற்றும் மேற்பார்வையில் இருந்தது, மேலும் பிழையைக் கண்டறிந்தவுடன், குடும்பத்துடன் தொடர்புகொண்டு அவர்களை மீண்டும் இணைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். இந்த அனுபவத்திற்காக குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.”

சிறுவன் கடந்த வியாழக்கிழமை பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து போர்ட் மியர்ஸில் உள்ள தென்மேற்கு புளோரிடா சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்தது. எனினும் ஆர்லாண்டோ செல்லும் விமானத்தில் சிறுவன் ‘தவறாக ஏறியதாக’ விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. (mirror.co.uk)

Latest articles

Similar articles