பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அரச இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் அவர் அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், அவர் விடுவிக்கப்படும் திகதி குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (adaderana.lk)
