தனுஷ்க மீதான தடை நீக்கம்: நாளை போட்டியில் பங்கேற்பார்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட சிங்கள விளையாட்டுக் கழகம் (SSC) அனுமதி வழங்கியுள்ளது.

ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணையின் பின் அவரது தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவர் சமந்த தொடன்வெல தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை (23) ஆரம்பமாகியுள்ள உள்ளூர் கழகமட்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ளவுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ண தொடரின் போது பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்ட தனுஷ்க குணதிலகதாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் தீர்மானித்திருந்தது.

எனினும், அவரது விளையாட்டுக் கழகமான சிங்கள விளையாட்டுக் கழகம் உள்ளூர் போட்டிகளில் விளையாட அவர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்காததால் அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணையின் பின்னர், அவரது தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தனுஷ்கவைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிங்கள விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவர் சமந்த தொடன்வெல தெரிவித்துள்ளார். (tamilwin.com)

Latest articles

Similar articles