நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் 2ஆம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய இணையத்தள பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கரிசனைகளுக்கு மத்தியில் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
https://twitter.com/NewsReportlk/status/1750156467154403743
