இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களால் பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று (06) மட்டுப்படுத்தப்பட்டதால் நாளை (07) எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களால் இன்றைய தினம் தேவையான எரிபொருள் கட்டளையை குறித்த கால அவகாசத்துக்குள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.

காலை பத்து மணிக்கு முன் தேவையான கட்டளையை செய்ய அனைவராலும் முடியாதுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தமது சங்கமும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் பொறுப்பல்ல எனவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest articles

Similar articles